நீ கையை புடிச்சு இழுத்தியா பதிவை இத்தோடு நிறுத்துகிறேன்


என்னை கையை பிடிச்சு இழுத்துட்டான்

ஷோபாசக்தியின் மீது விமர்சனம் வைத்ததும் நான் அவரிடம் சில விளங்கங்கள் கேட்டு இருந்தேன் அவரோ ஒரு மடலை அனுப்பி இருந்தார் .



அதில் மூணாவது முறையாக சந்திப்பு நிகழும் போது  அது நிகழ்ந்தது என்கிறார் தமிழச்சியோ நான் முதலில் இரயில்வே நிலையத்தில் கன்னத்தில் அறைந்தேன் மூன்றாவது ஓட்டல் அறைக்கு மட்டும் போனேன் ஆனால் ஓடி வந்துட்டேன்

யார் யாருக்கு பழியானாங்கன்னு தெரியலை ஆனால் பெரியார் தத்துவம் பேசி , மார்க்சியதத்துவம் பேசி பெண்களை மடக்கினார் என்றால் அது ஆகபெரிய  அயோக்கியத்தனம் என இப்பவும் நான் ஷோபா சக்திக்கு சொல்லிக்கிறேன்.(அப்போ வேறுமாதிரி மடக்கலாமான்னு  கேட்கபடாது மடக்குவதற்கு பெண்கள் என்ன நுகர்வு
பொருளா)

சரி இந்தம்மா தமிழச்சியை பற்றி பார்ப்போம் http:">இங்கே

இந்த சுட்டியில் இருப்பது தமிழச்சி எழுதியதுதான் என்ன எழுதுகிறார்னா

//சோபா சக்தி அவர்களுக்கு,

என்ன ரொம்ப நல்லா என்ஜாய் பண்றீங்க போல… உங்களை போல் அதிர்ஷ்டம் வேறு எந்த ஆண்களுக்கும் கிடைக்காது. கல்யாணம் கட்டினா ஒன்னு கட்டாட்டி கணக்குல கிடையாது இல்லையா? நீங்ககூட இந்த வருடம் தொடக்கத்தில் 1 - மாதம் கொரியா சென்றிருந்தீர்கள். நாவல் எழுதப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். எழுத்துப்பணி முடிந்துவிட்டதா? சரி! உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நீங்கள் என்ன லவ் பண்றீங்களா? மற்றவை உங்கள் பதில் கண்டு!//

அதாவது பலபெண்களை அனுபவிக்கும் ஷோபா உனது காட்டில் மழைடான்னு சொல்கிறார் என்னை கொஞ்சம்
ஏறெடுத்து பாரேன் என்கிறார் (வேறுவிதமாக எப்படி பொருள்கொள்வதென தமிழச்சிதான் விளக்கனும்)

பெண்களை தேடி அலையும் ஒரு லோலாயி என இவரால் கண்டிக்கப்பட்ட ஷோபாவிடம் ஏன் காதாலாகி கசிந்துருகவேண்டும் பிறகு வந்து நான் இரண்டு பிள்ளைக்கு அம்மாங்க என்னை கையை பிடிச்சு இழுத்துட்டான்னு சொல்லனும் ஒன்றும் விளங்கல்லை என சொல்பவர்களுக்கு

இதோ தமிழச்சியின் பதிவு

தமிழச்சியின் எதிர்விணை - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

இதில் எழுதுகிறார்

//கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.//

அட ஷோபா சக்தி உங்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுத்திட்டார் என நீங்கள் சொல்கிறீர்கள்
ஆனால் நீங்கள்தானே என்னை லவ் பண்றீங்களான்னு கேட்கிறீங்க

இப்ப தாக்குதல் தொடுத்தது அவரல்ல நீங்கள்தான் என சொல்லலாமா

ஷோபா சொல்கிறார் உங்களிடையே உறவே இருந்ததுன்னு
//தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது  மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது  மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. //

அதாவது 2008ல் உறவு பிரிந்தவுடன் நீங்கள் கேட்கிறீர்கள்
"என்னை லவ் பண்றியான்னு//

ஆனால் உங்கள் கட்டுரைகள் சொல்கிறது  அவர் பாலியல் அத்துமீறல் புரிந்தார்னு எண்ட குருவாயூரப்பா

பாலியல் உறவு முறிந்தவுடன் அதற்கு பெண்ணே பொறுப்பு என்பது எப்படி ஆணாதிக்கமோ பாலியல் உறவு முறிந்தவுடன் அதை பாலியல் சுரண்டல் என்பதும் ஆணாதிக்க மனோபாவம்தான் .இரயாகரன் சொல்வதுபோல ஆண்போல பேசும் பெண் இவர்

சரி வர்க்கம் வர்க்கம் என குதித்து லீணா மேட்டுகுடி வர்க்கம் அதனால் யோனி முலை என எழுதி அதில் மார்க்சிய ஆசான்களையும் உபரி மதிப்பையும் எழுதி கேவலபடுத்தினார்
என சொல்லும் வர்க்கம் பேசிய முற்போக்கு வாதிகள் இந்த தமிழச்சி என்ன வர்க்கம் என்பதை அறிந்துதான் பேசுகிறார்களா யாமறியேன்

பெண்மீதான பாலியல் அத்துமீறல் அல்ல பெண்ணை சுரண்ட வும் தனது எழுத்து மற்றும்  பெரியாயரிய கருத்துக்களை பயன்படுத்தினார் என்கிற தமிழச்சியின் குற்றச்சாட்டை
ஏற்றுகொண்டும் அதே வேளையில் இதற்கு உடன்போனவர்தான் இந்த தமிழச்சி என்பதையும் சேர்த்து அம்பல படுத்துவதே சிறந்த செயல் .

அடுத்து ஒரு அரசியல் கூட்டனி ஷோபாவை பழிதீர்க்கவும் அதன் மூலம் அ. மார்க்ஸ் மற்றும் சுகுணாவை பழிதீர்க்கவும் கிளம்பி விட்டார்கள் அவர்கள் இதோ பாருங்கள் இப்படி பட்ட கயவனே இந்த ஷோபா எனவே இவர்களுக்கு எதிராக நாங்கள் பேசியது போய் கேள்வி கேட்டதும் நியாயமானதே என்கிறார்கள்

இதன் மூலம் தாங்கள் செய்த அராஜகத்தை மூடி மறைக்கப்பார்கிறார்கள் .

அராஜகவாதம் எந்த உருவில் வந்தாலும் அது கொண்டையை வெளிக்காட்டுகிறது


பெரியாரின் எழுத்துக்களை காப்பி பேஸ்டு செய்தால் அவர் பெரியாரே என நம்பும் தம்பிகள் இருக்கும்வரை இவர்கள் உழவு ஓட்ட இந்த இணையம் திறந்தே கிடக்கிறது


இதை படித்து தலை சுற்றுபவர்கள் முதலில் கீழ்கண்ட சுட்டிகளை படிக்கவும்

1.இரயாகரன் குமுறியது


2.தமிழச்சி கொட்டியது


3.ஒரு மக இக தோழன் குமுறியது

4.கீற்றுவில் வந்தது

5.தமிழச்சி எழுதிய கவிஜை



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

10 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post